ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர்










தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார். ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும்.

மேலும்……..

இஸ்ரேல்லுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை.



டெஹ்ரான்: முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் எங்களிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதநிஜாத் அறிவித்துள்ளார். உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார்.

ஈரான் இப்போது ஒரு அணு ஆயுத நாடாகும். 20 சதவீத எரிபொருளில், முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாம் தயாரித்து விட்டோம். அதை தற்போது விஞ்ஞானிகளிடம் கொடுத்துள்ளோம். 2 நாட்களில் இதைச் செய்துள்ளோம் என்றார் அகமதிநிஜாத்.

தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தொடங்கியிருப்பதாக செவ்வாய்க்கிழமைதான் அறிவித்தது ஈரான். இந்த நிலையில் முதல் தொகுதி செறிவூட்டும் பணியை 2 நாட்களில் அது முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவார்கள். அதேசமயம், இதை வைத்து அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுரேனியம் செறிவூட்டும் பணியை நிறுத்துமாறும், அதைத் தொடரக் கூடாது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எச்சரித்துள்ளன. ஆனால் அதை ஈரான் நிராகரித்து விட்டது. தடை விதிப்போம் என்று ஐ.நா. விடுத்த மிரட்டலையும் அது புறக்கணித்து விட்டது.

எங்களிடம் உள்ள அனைத்து யுரேனியத்தையும் செறிவூட்டும் பணியை தொடருவோம் என்றும் ஈரான் கூறி விட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்பட்ட செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த கையோடு சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் அகமதிநிஜாத்.

அவரிடம் பேசுகையில், ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள், காஸா மக்களிடமும், லெபனானின் ஹிஸ்புல்லாவிடமும் பட்ட தோல்விக்குப் பழி வாங்க ஈரான் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகவே அமையும். அதுபோல ஒரு தாக்குதல் நடந்தால், அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நீங்களும் எதிர்க்க வேண்டும்.

அவர்கள் வைத்துள்ள இஸ்ரேல் என்ற பெயரிலான நாடே இல்லாத அளவுக்கு, அடையாளம் தெரியாத அளவுக்கு அதை அழித்து உருக்குலைத்து விடுவோம்.அத்தோடு ஜியோனிஸ்டுகளின் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்டி விடுவோம்.

சிரியா, லெபனானன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் பக்கம் எப்போதும் ஈரான் துணை நிற்கும். விரைவில் ஜியோனிஸ்டுகள் அழிவது உறுதி என்றார் அகமதிநிஜாத்.இஸ்ரேல் என்ற நாட்டை ஈரான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டை ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் ஈரான் அழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- கூத்தாநல்லூர்

அடுத்தடுத்து ஈரான் ஏவுகணைச் சோதனை-இஸ்ரேலுக்கு குறி?

Iran Missiles

வாஷிங்டன்: நேற்று ஏவுகணைச் சோதனை நடத்திய ஈரான் இன்று 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி சோதனை நடத்தியுள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஈரானின் ஏவுகணைச் சோதனகளை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த சோதனைகள் மூலம் அமெரிக்க நகரங்களையும், இஸ்ரேலையும் தாக்கும் வல்லமை தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நீர் வழிப் பாதையில்தான் உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது)

ஈரானின் இந்த அடுத்தடுத்த சோதனைகளால் கச்சா எண்ணையின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

ஏவுகணைச் சோதனை குறித்து ஈரான் விமானப்படை தலைமை கமாண்டரான ஜெனரல் ஹூசேன் சலாமி கூறுகையில், எதிரிகளுக்கு எதிரான எங்களது வல்லமையைக் காட்டும் சோதனை இது. சமீபகாலமாக எங்களது எதிரிகள் ஈரானை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு இது பதிலடி.

எங்களை யாரேனும் தாக்கினால், எண்ணைக் குழாய்கள் செல்லும் நீர் வழிப் பாதையை மூடி விடுவோம். பதிலுக்குத் தாக்கும் திறமையும் எங்களுக்கு உள்ளது.

எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர்.

எங்களது விரல்கள் டிரிக்கரில்தான் எப்போதும் உள்ளன. எந்த சமயத்திலும் தாக்கக்கூடிய வகையில் ஏவுகணகைளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என்றார்.

இன்று நடந்த ஏவுகணைச் சோதனையில் மொத்தம் 9 ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளன. அனைத்துமே நீண்ட தூர மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் ஆகும்.

இதில் சஹாப்-3 ரக ஏவுகணை, 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இதில் 1 டன் வெடிபொருளை பொருத்தி அனுப்பலாம்.

இதன் மூலம் இஸ்ரேல், துருக்கி, அரேபிய வளைகுடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

அமெரிக்கா கடும் கண்டனம்:

ஈரானின் ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றன.

இனிமேலும் சோதனை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் நடந்து கொள்வதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட்கேட்ஸும் எச்சரித்துள்ளார்.

 நனறி: http://thatstamil.oneindia.in/news/2008/07/10/world-iran-tests-long-and-medium-range-missiles.html#cmntTop