பாபர் மஸ்ஜிதை இடித்தது யாருக்குத் தெரியாது?

லிபரான் அறிக்கை
ஏ.ஹெச்.ஹத்தீப்

யாருக்குத் தெரியாது? 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதிக்குமுன்பே ‘பாபர் மஸ்ஜித் இடிபடப் போகிறது’ என்று யாருக்குத்தான் தெரியாது?

உத்தரப்பிரதேச அரசுக்குத் தெரியும். மாநில ஆளுனருக்குத் தெரியும்.அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குத் தெரியும்.உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியும். தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக்குத் தெரியும். மக்களவைக்குத் தெரியும். ஏன் உலகத்துக்கே தெரியும். “ பெருமைமிகு இந்தியத் திருநாடு எனது புனித இடங்களைப் பாதுகாக்கும்”என்ற நம்பிக்கையோடு இருந்த 20 கோடி முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை தெரியாது போயிருக்கலாம். 6ஆம் நாள் நடந்ததெல்லாம் ‘ராமபக்தர்கள் என்ற போர்வையில் கூலிப்படைகளால் ஒரு வழிப்பாட்டுத்தளம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது’என்பதற்கான உறுதியான ஆதாரங்களையும் ஆவனங்களையும் தேசத்துக்கு வாரி வழங்கிய ‘சடங்குகள்’ மட்டுமே. இன்னும் அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், தேசத்தின்மீதும் சட்டத்தின் ஆட்சியின்மீதும் அளவற்ற நம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்த கோடானுகோடி மக்களின் முகத்தில் காறி உமிழ்ந்த இந்துத்துவக் கலாச்சார நிகழ்வு.

‘அவற்றைப் படித்து முடிப்பதற்கு நீதிபதி லிபரானுக்கு ஏன் 17 ஆண்டுகள் தேவைப்பட்டன?’ என்பதே மில்லியன் டாலர் கொஷ்டின். அதனாலேயே பிரகாஷ் காரத் போன்ற இடதுசாரித் தலைவர்கள், “ஆணையம் இவ்வளவு காலம் தாழ்த்தி அறிக்கை அளித்திருப்பதிலேயே ஊழல் நடந்திருக்கிறது” என்று குமுறுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சிக்குள் பல்வேறு சோகக்காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில், குறிப்பாக இந்துத்துவ நெருப்பு நீர்த்துப் போயிருக்கிற இந்தக் காலகட்டத்தில், திடீரென்று ‘இந்தப் பூதம்’ புறப்பட வேண்டிய அவசியமென்ன என்ற வினா எல்லோர் உள்ளத்திலும் முளைத்திருப்பது என்னவோ உண்மை. “இந்த அறிக்கையையே எங்கள் ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் மலர்வதற்குப் பயன்படுத்தப் போகிறோம்”என்று கல்யாண் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முழங்குவதை வைத்துப் பார்க்கையில், சவப்பெட்டி வாங்குவதிலேயே லஞ்சம் புரிந்த ‘மாமனிதர்கள்’ வாழும் பாரதத்தில் எதுவும் நடக்கலாம் என்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது. இங்கே மிக முக்கியமாக இந்திய நீதிதேவதைக்கு ஒரு ‘சபாஷ்’ போட வேண்டும்.

பொதுவாகவே இதுபோன்ற ஆணயங்கள் அமைக்கும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் “ஏமாற்று வேலை” என்று வர்ணிப்பதுண்டு. பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு மட்டுமின்றி, உணர்ச்சிக் கொந்தளிப்பைச் சமன் செய்வதற்கும் அவை பயன்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை வைத்துக்கொண்டு தனது வீட்டுக் குழந்தையைச் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளுவதைப்போல் கண்டிக்கலாம்; தண்டிக்க முடியாது. தேசத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய உயர்குலத்து உத்தமர்களை வெறுமனே ‘குற்றவாளிகள்’ என்று தூரத்தில் நின்று சுட்டிக்காட்டலாம். ஆனால் அவர்களுக்கு ஒரு மணிநேரச் சிறைத் தண்டனைகூட வழங்க முடியாது.

பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி என்ன ஆணையமடா இது? பாம்பென்றால் விஷம் வேண்டும். இல்லையெனில் அது நைந்துபோன கயிற்றுக்குச் சமம். காலால் உதைப்பதற்குக்கூடத் தகுதிவுடையதன்று. அதனால்தான் ‘குற்றவாளி’என்று சுட்டிக்காட்டப்பட்ட கல்யாண் சிங், “ இந்த நாட்டிலே என்ன மாதிரி அரசியல் நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறுவதற்கு யார் இந்த லிபரான்?” என்று இடித்துரைக்கிறார். குற்றவாளிகள் நீதிபதிகளுக்குத் தண்டனை வழங்குகிற ஆணைய அமைப்புச் சட்டங்கள், மனிதர்களின் உழைப்பைக் கபளீகரம் செய்கிற முதலைகள். பொன்னான நேரத்தைச் சுரண்டுகிற பெருச்சாளிகள். பொதுநிதியை அரிக்கின்ற கரையான்கள்.

தொடர்ந்து படிக்க……..

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற’ சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடந்தால் இத்தகைய இனப்படுகொலைகள் அரசு உதவியுடன் அரங்கேறும் என்று குஜராத்தில் காட்டப்பட்டது.

இதையெல்லாம் முன்னின்று நடத்திய கொலை பாதகன் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் பதவி, தண்டனையாக(?) வழங்கப்பட்டது. (முஸ்லிம்களை அகதி முகாம்களில் அடைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக.

குஜராத் இனப்படுகொலைகளின் போது முஸ்லிம் பெண்களின் மீது சங்பரிவார ஆண் மிருகங்கள் நடத்திய பாலியல் கொடுமைகள் எழுத்தில் வடிக்க இயலாதவை. இந்தக் கொடியவர்களுக்கு நீதிமன்றங்களில் கண்டனம்தான் தெரிவிக்க முடிந்ததே தவிர, நடந்த கொலைகளுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடியவில்லை.

மறதியால் சபிக்கப்பட்ட மக்களை திசைதிருப்ப எத்தனையோ வேடிக்கைகள் இங்கே அரங்கேறும். மதவெறியின் கொடூரங்களை அதனால் நடத்தப்பட்டக் கொடுமைகளை, அதை வழிநடத்திய தலைமைகளை, சட்டக் காப்பாளர்களின் கயமைகளை, மக்கள் மறந்துவிடாமலும், மனங்கள் மரத்துவிடாமலும் யாராலும் தடுக்க முடியும்.

அதைச் செய்யவல்ல ஒரே ஆயுதம் கலை ஊடகம்தான். குஜராத்தின் கொடுமைகளை சுப்ரதீப் சக்ரவர்த்தியின் கோத்ரா தக், ரமேஷ் டாம்பிளின் ஆக்ரோஷ் ஆகிய குறும்படங்களின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டன.

ஆனால் தமிழில் குஜராத்தின் கொடுமைகளை அதியற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் இளம் இயக்குநர், பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார்.

‘திற’ (Open) என்ற அவரது குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.09 அன்று சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார், மக்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அயோக்கியத்தனங்களை, அராஜகங்களை இப்படித் தோலுரித்துக் காட்டிய படம், நாமறிந்த வரை தமிழில் இதுபோல வேறில்லை எனலாம்.

மேலும்………

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்


அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .சமுதாய
தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவரிகளை
நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது உலகின் பல்வேறு பகுதிகளில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள்
சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம் முதலில்
நாம் பேராசிரியர்,M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கேள்வி. பதில்கள்
www.muthupet.org இணையதளத்தின் இடம்பெற்றுள்ளது
,இன்ஷா அல்லாஹ் இரண்டாவதாக தமிழக முஸ்லிம்களின் தேசிய
பிரதிநிதியும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக் குழு
உறுப்பினரும்,இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை வேண்டும் என்று முதன்
முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவருமான வேலூர் பாராளுமன்ற
உறுப்பினர் அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள்
இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.
உங்களுடைய கேள்விகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டுமா!!!!!
உங்களுடைய  சமுதாய பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமா ??

வாசகர்களே ஆயத்தமாகுங்கள், உங்கள் கேள்விகளை ask@muthupet.org

என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

முத்துப்பேட்டை

www.muthupet.org

குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்யும் சிறப்பு கருத்தரங்கம்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.12.2009 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், மிர்காப் பகுதியிலுள்ள திருச்சி உணவகம், மர்ஹூம் ஜி.எம். பனாத்வாலா நினைவரங்கில்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ அமைப்பான குவைத் காயிதெ மில்லத் பேரவை ஏற்பாடு செய்யும் ‘சிறப்பு கருத்தரங்கம்’ கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெற இருக்கின்றன.

v      பாபர் மஸ்ஜித் நினைவு

v      நீதிபதி லிபரான் கழிஷன் அறிக்கை

v      இந்திய அரசின் நடவடிக்கை

v      இந்திய முஸ்லிம்களின் அணுகுமுறை

இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத் வாழ் தமிழக உலமா (இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்) பெருமக்கள், சான்றோர்கள், சமுதாய சிந்தனையாளர்கள், தமிழ் முஸ்லிம் பொது நல, மார்க்க அமைப்புகளின் தலைவர்கள், சகோதர சமுதாய அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து / களைந்து தங்கள் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர் மருத்துவர் கே.எஸ். அன்வர் பாட்சா மற்றும் அமைப்புக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு (+965) 97862316 / 66641434 என்ற எண்களின் தொடர்பு கொள்ளுமாறும், பேரவையின் அதிகாரப்பூர்வ www.iumlkuwait.blogspot.com / www.qmfkuwait.blogspot.com என்ற வலைப்பூக்களை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை iumlkuwait11@gmail.com / qmfkuwait11@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் பேரவையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் பேரவை நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

என்றும் மாறா அன்புடன்…

குவைத்திலிருந்து…

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

முஸ்லிம்கள்இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

டெல்லி & அகமதாபாத்: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டு வழங்கக் கோரி பரிந்துரை செய்துள்ள நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கைக்கு பாஜகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

விஎச்பி பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறுகையில்,

இந்த அறிக்கை அரசியல் சட்டத்துக்கும், இந்துக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமானது. இதை ஏற்கவே முடியாது. சோனியா காந்தி சொல்லிவிட்டதால் முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் வேலைவாய்ப்பி்ல் இட ஒதுக்கீடு வழங்குவது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முஸ்லீம்களாக, கிருஸ்துவர்களாக மாறிய தலித்களுக்கும் எஸ்.சி. கோட்டாவில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்கிறது இந்த அறிக்கை. தங்கள் மதத்தில் ஜாதியே கிடையாது என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லீமகளும், கிருஸ்துவர்களும் ஏன் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டும்?.

இஸ்லாமிய சட்டத்தைச் சொல்லி மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயலாதவர்கள் இந்த அறிக்கையை அமலாக்கினால் அது ஜிகாத் சக்திகளுக்கே மேலும் உறுதுணையாக அமையும் என்றார் தொகாடியா.

காங்​கி​ரஸ் வர​வேற்பு:

இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்​கி​ரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பா​ளர் அபி​ஷேக் சிங்வி கூறுகையில்,

மிக ​வும் நுட்​ப​மாக ஆய்ந்து நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா,​​ தனது அறிக்​கையை தாக்​கல் செய்​துள்​ளார்.​ இதில் குறிப்​பிட்​டுள்ள அம்​சங்​கள் வர​வேற்​கத்​தக்​கவை.

இந்த பரிந்​து​ரை​கள் குறித்து விரி​வான விவா​தம் நடத்தி அதை நடை​மு​றைப்​ப​டுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றார்.

மதமாற்றத்தை தூண்டும் அறிக்கை-பாஜக:

பாஜக செய்​தித் தொடர்​பா​ளர் ராஜீவ் பிர​தாப் ரூடி கூறுகையில்,

ரங் ​க​நாத் மிஸ்ரா பரிந்​து​ரை​கள்,​​ மத​மாற்​றத்தை ஊக்​கு​விக்​கும் வகை​யில் உள்​ளன.​ மேலும்,​​ தாழ்த்​தப்​பட்​டோர் மற்​றும் பழங்​கு​டி​யி​ன​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள சலு​கை​களை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்​து​ரை​ நாட்​டுக்கு பய​னற்​றது என்​றார்.

லாலு-பாஸ்வான் ஆதரவு:

இந்த அறிககைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் பரிந்துரைகளை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் குதிப்பேன். அரசு வேலைகளில் சிறுபான்மையினர் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர். இதனால் இந்த அறிக்கையை அமல்படுத்துவத மிக மிக அவசியம் என்றார்.

லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களும கிருஸ்தவர்களும் மிகக் குறைவாகவே உள்ளனர். இதனால் அவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றார்.

நன்றி ThatsTamil

// <![CDATA[// // <![CDATA[//

முஸ்​லீம்​க​ளுக்கு 10% இட ஒதுக்​கீடு:ரங்கநாத் மிஸ்ரா கமி​ஷன் பரிந்​துரை

டெல்லி: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டும்,​​ மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீ​டும் வழங்​க​லாம் என முன்​னாள் தலைமை நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யி​லான கமி​ஷன் பரிந்​துரைள்​ளது.

முஸ்​லீம்​கள் உள்​பட அனைத்து சிறு​பான்​மை​யி​னர்​க​ளின் நலன்​களை பாது​காக்​கும் பொருட்​டும்,​​ அவர்​க​ளின் வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தும் வகை​யி​லும் அவர்​க​ளுக்கு அரசு வேலை​ வாய்ப்​பு​க​ளில் இடஒதுக்​கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 2004ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதி​பதி ​ ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யில் இந்த கமி​ஷன் அமைக்​கப்​பட்​டது.

இந்த கமி​ஷ​னின் சமீபத்தில் அரசிடம் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையை நேற்று மக்​க​ள​வை​யில் சிறு​பான்​மை​யி​னர் நலத்​துறை அமைச்​சர் சல்​மான் குர்​ஷித் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்​சங்​கள்:

மத்​திய,​​ மாநில அர​சு​க​ளின் வேலை​வாய்ப்​புகளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்​டும்.

இதர மத மற்​றும் மொழி​ சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீட்டை அளிக்​க​ வேண்​டும்.

அனைத்து மதங்​க​ளி​லும் உள்ள தலித்​து​களையும் ஷெட்​யூல்டு கேஸ்ட் பட்டியலில்​ சேர்க்க வேண்​டும்.​ (இதன்மூலம் இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்துகளும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்).

குறிப் ​பிட்ட ஏதா​வது ஒரு பகு​தி​யில் அல்​லது ஏதா​வது ஒரு பணிக்கு முஸ்​லீம் விண்​ணப்​ப​தா​ரர்​கள் போது​மான அள​வில் கிடைக்​க​வில்லை என்​றால்,​​ அந்த பின்​ன​டைவு இடங்​களை மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு அளிக்க வேண்​டும்.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு-கமி​ஷ​னில் கருத்து வேறு​பாடு:

இந் நிலையில் இந்த கமி​ஷ​னின் உறுப்​பி​னரான ஆஷா தாஸ்,​​ கமி​ஷ​னின் பரிந்​து​ரை​க​ளில் மாறு​பட்டு சில பரிந்​து​ரை​களை அளித்​துள்​ளார்.

மதம் மாறிய தலித்​து​க​ளுக்கு எஸ்.சிக​ளுக்​கான சலு​கை​கள் வழங்​கக்​கூ​டாது.​ வேண்டுமானால் பிற்​பட்​டோர் பிரி​வி​ன​ருக்​கு​ரிய சலு​கை​களை வழங்​க​லாம் என்று கூறியுள்ளார்.

காங்​கி​ரஸ் வர​வேற்பு-பாஜக எதி்ர்ப்பு:

இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்​கி​ரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பா​ளர் அபி​ஷேக் சிங்வி கூறுகையில்,

மிக ​வும் நுட்​ப​மாக ஆய்ந்து நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா,​​ தனது அறிக்​கையை தாக்​கல் செய்​துள்​ளார்.​ இதில் குறிப்​பிட்​டுள்ள அம்​சங்​கள் வர​வேற்​கத்​தக்​கவை.

இந்த பரிந்​து​ரை​கள் குறித்து விரி​வான விவா​தம் நடத்தி அதை நடை​மு​றைப்​ப​டுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றார்.

பாஜக செய்​தித் தொடர்​பா​ளர் ராஜீவ் பிர​தாப் ரூடி கூறுகையில்,

ரங் ​க​நாத் மிஸ்ரா பரிந்​து​ரை​கள்,​​ மத​மாற்​றத்தை ஊக்​கு​விக்​கும் வகை​யில் உள்​ளன.​ மேலும்,​​ தாழ்த்​தப்​பட்​டோர் மற்​றும் பழங்​கு​டி​யி​ன​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள சலு​கை​களை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்​து​ரை​ நாட்​டுக்கு பய​னற்​றது என்​றார்.

ஜைன மதத்தினர் கோரிக்கை:

இந் நிலையில் நாட்​டில் பல்​வேறு சமூ​கத்​தி​னர் தங்​களை சிறு​பான்​மை​யி​னர் பட்​டிய​லில் சேர்க்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்​ள​தா​க​வும்,​​ இது தொடர்​பாக சட்ட நிபு​ணர்​க​ளின் கருத்​து​க​ளைக் கோரி​யுள்​ள​தா​க​வும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

சிறு​பான்​மை​யி​னர் பட்​டிய​லில் தற்​போது முஸ்​லிம்​கள்,​​ சீக்​கி​யர்​கள்,​​ பார்​சி​கள்,​​ கிருஸ்​து​வர்​கள் மற்​றும் புத்த மதத்​தி​னர் ஆகிய ஐந்து சமூ​கத்​தி​னர் மட்​டுமே உள்​ள​னர்.

ஆனால், ஜைன மதத்​தி​ன​ரும் (ஜெயின்கள்) தங்களை இதில் சேர்க்குமாறு வலி​யு​றுத்​தி​ வருகின்றனர்.

நன்றி ThatsTamil

அப்துல் ரஹ்மான் MP பாராளுமன்ற உரை-2

அப்துல் ரஹ்மான் MP பாராளுமன்ற உரை-1

இஸ்லாத்தின் ஒளியில் அமைச்சர்.

இந்தியா-ஜப்பான் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் கட்டமைப்புகளின் நிலை குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அகமது கலந்து கொண்டார்.

பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அகமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார்.

இது தொடர்பாக விழா அமைப்பாளர் ஒருவர் கூறும் போது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குத்து விளக்கு ஏற்ற மாட்டார்கள். அவர் இஸ்லாமியர் என்பதால் குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார் என்றார்.

இந்த விழாவில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். மத்திய மந்திரியின் செயலை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்

நன்றி அதிரை போஸ்ட்

லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை!


லிபரான் அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் 07-12-2009 அன்று மக்களவையில் ஆற்றிய எழுச்சி மிகு உரை!
அவைத் தலைவர் அவர்களே!
பாபர் மஸ்ஜித் தகர்ப்பு குறித்து விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 டிசம்பர் 6ம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது மிகவும் கொடிய
செயலாகும். இக்குற்றச் செயலைக் செய்தவர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தை மட்டும் தகர்க்கவில்லை, மாறாக அரசியல் சாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கைகளையும் சேர்த்தே தகர்த்துள்ளனர். இந்த அவமானகரமான சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேதனையுடன் புறந்தள்ளிய பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு இக்கொடிய குற்றவாளி கூட்டத்தினர் பங்கம் இழைத்துள்ளனர்.

abdulrahmanமஸ்ஜித் தகர்ப்பு சங் பரிவாரங்களும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி, பஜ்ரங் தன், பி.ஜே.பி, ஆகியவற்றால் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான் என்பதை விபரான் கமிஷன் அறிக்கை வெளிக் கொணர்ந்துள்ளது. அது தானாகவோ, திடீரெனவோ நடந்தது அல்ல. மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட ஒன்று,. இந்த அறிக்கை 68 நபர்களின் தனிப்பட்ட குற்றச் செயல்களை வரையறுத்துள்ளது. இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ள 68 நபர்களின் மீது என்ன வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய வரலாற்றிலே இது மிகவும் அவமானகரமான ஒரு செயலாகும்.

1995ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலே சொல்லப்பட்ட ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய ஜனநாயக முன்னனி ஆட்சியிலிருந்த போது அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான நபரை குறிப்பிட்டு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பாகும். அதிலே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாவது,

“” இந்த செயல் ஒரு தேச அவமானம். தகர்க்கப்பட்டது ஒரு புரதான கட்டிடம் மட்டுமல்ல நீதியின் மீதும், பெரும்பான்மையினரின் நியாயமான நடவடிக்கைகள் மீதும் சிறுபான்மையினர் கொண்டிருந்த நம்பிக்கையும் தான். சட்டத்தின் ஆட்சி மீதும், அரசியல் சாசன நடைமுறைகளின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அது குலைத்துவிட்டது||. இதுதான் உச்சநீதிமன்றம் கூறிய வார்த்தைகள்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நேரத்திலே உத்திர பிரதேச மாநிலம் பி.ஜே.பி. யால் ஆளப்பட்டு வந்தது. அதன் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ன் முழு உதவியுடன் தான் தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது. அது தனியாக ஒரு இணை அரசை நடத்தியது என்பது லிபரான் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகர்ப்பு செயலுக்கு மிக முக்கியமான சக்தியாக அது பயன்படுத்தப்பட்டது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்தும், சிறுபான்மையினர், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் கூட, அப்பாவி மக்களை பாதுகாக்க காவல்துறைக்கு எந்த வித ஆணையையும் அவர் வழங்கவில்லை. இதன் பயனாக அனைத்து காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், ஒட்டு மொத்த அரசு எந்திரமும் பாதுகாவலர்களாக இல்லாமல் சீருடை தரித்த ” கரசேவகர்களாக|| பணியாற்றினர்.

ரகசிய கேமராக்களும், வெடி பொருள் கண்டுபிடிக்கும் கருவிகளும் அரசு நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட வில்லை.

அரசு முறைப்படி செய்யும் வீடியோ பதிவுகள் நிறுத்தப்பட்டன. ஊடகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லிபரான் அறிக்கையின்படி ஊடக வியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு மிகச் சிறிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டனர்.

மானபங்கப்படுத்தப்பட்டனர். இது மிகவும் அவமானகரமான செயலாகும். இந்த நாட்டிற்க்கும் அதன் வரலாற்றுக்கும் துரோகமிழைக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நபர் இந்த நாட்டின் மிக உயரிய ஜனநாயக நிறுவனமான இந்த அவையின் உறுப்பினராக உள்ளார் ………… ( அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.)

இந்த செயலின் தளகர்த்தாவாக இருந்தவர் திரு. எல்.கே.அத்வானி. 1990ல் அவர் சோம்நாத்திலிருந்து அயோத்தியாவிற்கு நடத்திய ரத யாத்திரை நாடு முழுவதும் 3000 கலவரங்களை தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்னனர். “” டைம்ஸ் ஆப் இந்தியா|| தன் தலையங்கத்திலே இது ரதயாத்திரை அல்ல “” ரத்த யாத்திரை|| எனக் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட ஒரு அவமானகரமான நிகழ்ச்சி இந்த நாட்டிலே நடந்தது. பி.ஜே.பின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்தாலும் அன்றைய பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்கள் தன் அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக ரத யாத்திரையை ஆதரித்து விடவில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் செயலை அவர் ஆதரிக்காததால் அவர் தன் அரசாட்சியை இழக்க வேண்டியிருந்தது. அதை எதிர் கொள்ள அவர் சிறிதும் தயங்கவில்லை. வி.பி.சிங் அவர்களின் வீரத்தை இந்த நேரத்திலே நான் மெச்சுகிறேன்.

லிபரான் கமிஷன் முன்பும், மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எல்.கே. அத்வானி அவர்கள் முரன்படும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன் வாழ்நாளிலே மிகுந்த துயரமளித்த சம்பவம் என்றார். மற்றொரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன்னுடைய கட்சியின் ஓட்டு வங்கியை பெரிதாக்கியுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மற்றொரு சமயம் நாமர் கோவில் இயக்கம் இந்துக்களின் பெருமையை பறை சாற்றுகிறது என்றார். இந்து மத உணர்வுகளில் நஞ்சு கலக்கும் அவர் செயலை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.

இந்த நாட்டின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை குலைப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி, பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் மிகச் பெரும் தொகையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. பல்வேறு சமயங்களில் அவர்களின் கணக்குகளில் பல கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இப்படிப்பட்ட ஒரு கொடுங் குற்றச் செயலை நிறைவேற்ற வேண்டி கோடி கோடியாய் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டது? யார் இதை உபயோகப்படுத்தியது? எப்படி உபயோகப்படுத்தப்பட்டது? இந்த எல்லா உண்மைகளும் இந்த தேசத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்த அனைத்து வழக்குகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரே நீதிமன்றத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.

இந்த நேரத்திலே நான் என் உரையை முடிக்கு முன்னர் தேசத் தலைவர் ஒருவர் சமூக நல்லிணகத்தை எப்படி மதித்தார், எப்படி நடந்து கொண்டார் தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.

சுதந்திரத்தின் போது நாடு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் உருவான பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை காப்பாற்ற குரலெழுப்பினார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் முஹம்மது அலி ஜின்னா விடம் “நீங்கள் வெளிநாட்டவர் . நீங்கள் இந்தியாவின் மைந்தன் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் . நாங்கள் இந்திய நாட்டின் மைந்தர்கள். சிறுபான்மையினர் விவகாரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.

சிறுபான்மையினர் பிரச்சினைகளை எப்படி அனுகுவது என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் அயல் நாட்டிலே இருக்கிறீர்கள் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகத்தை குறித்து பேச வேண்டாம். அப்படி சிறுபான்மையினர் குறித்து பேச வேண்டியது நியாயமே என கருதினால் உங்கள் நாட்டில் வாழும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் பற்றி யோசியுங்கள். நீங்கள் உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்னைகளை குறித்து கவலைப்படுங்கள். இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் அல்லது முஸ்லிம் சமூகம் குறித்து ஏதும் பேச வேண்டாம். எங்கள் தாய்நாட்டிலே ஏற்படும் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கும் துணிவு எங்களுக்கு உள்ளது|| என்றார். இதுதான் தேசப்பற்று – இதுதான் தேசியம் – இதுதான் சமூக நல்லிணக்கம் – இதுதான் இந்த நாட்டின் தலைவர்கள் காட்டிய சமூக ஒற்றுமை. இங்கே உள்ள அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட நடத்தையை பார்த்து பாடம் கற்றக்கொள்ள வேண்டும்.

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் ஒரு மதத்தாரின் வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவதற்காக மற்றொரு சாராரின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுவதில்லை. நம் இந்திய மக்களிடம் இத்தகைய கலாச்சாரம் இல்லை. இந்தியா சமயச் சார்பற்ற நாடு – எந்த மதமும் இன்னொரு மதத்திற்கு எதிரானது அல்ல – ஒரு மதத்தின் நெறிகளுக்கு எதிராக இன்னொரு மதம் நெறியற்ற முறையை தருவதில்லை. எல்லா மதங்களுமே அறநெறிகளையே போதிக்கின்றன. நாம் மதங்களின் பெயரால் வேறுபடலாம். ஆனால் அறநெறிகளின்படி நாம் எல்லோரும் சகோதர, சகோதரிகள் .

நான் ஒரே ஒரு கருத்தை உங்களின் பரிசீலனைக்கு வைத்து முடிக்க விரும்புகிறேன். பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள சில நபர்களின் கோபத்தின் வெளிப்பாடாக சில கோவில்கள் அங்கே சிதைக்கப்பட்டன……………….. ( குறுக்கீடுகள்) ……. உடனடியாக அவற்றை சரி செய்து விடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது……………….. ( குறுக்கீடுகள்) ……. இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். இருந்தபோதும் பாகிஸ்தான் அரசு சிதைக்கப்பட்ட கோவில்களை உடனடியாக புணரமைக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது………………. ( குறுக்கீடுகள்) ……. கோவில்களை புணரமைத்தது மட்டும் அல்ல, அவற்றை மீண்டும் இந்து சமூகத்தினரிடம் ஒப்படைக்கும் போது நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் திரு அத்வானி அவர்களும் சென்றிருந்தார். ………………. ( குறுக்கீடுகள்) ……. புணரமைக்கப்பட்ட கோவில்களின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். நம்முடைய நாடு சமய சார்பற்ற நாடாக இருப்பதால் அதே போல தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தும் அதே இடத்திலே மக்களால் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என இந்த மேலான அவையிலே வேண்டுகோள் வைக்கிறேன். அதற்கு அத்வானி அவர்கள் தலைமை ஏற்றால் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்திய வரலாற்றிலே இப்படிப்பட்ட சமயச் சார்பின்மை – இப்படிப்பட்ட சமூக நல்லிணக்கம் – இப்படிப்பட்ட சமூக ஒற்றுமை நிறுவப்பட வேண்டும். இது அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய சகாப்தமாக இருக்கும். உலக நாடுகளின் முன்னால் நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இது மிகவும் பெருமை தருவதாக இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்திலே நான் மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன். மதத்தின் பெயரால் மத வழிபாட்டு முறையின் பெயரால் மக்களிள் சகோதரத்துவத்தை மாறுபடுத்தாதீர்கள்……………….. ( குறுக்கீடுகள்) ……. எல்லா மதங்களும் அறநெறிகளையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் மக்களை சகோதர சகோதரிகளாக வாழவே பயிற்று விக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை கொள்கையை மாநில பேதமின்றி – கட்சிபேதமின்றி நம் உறுப்பினர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டும்.

இந்த விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வாய்ப்பு அளித்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

- தமிழில் வெ. ஜீவகிரிதரன்
www.muthupet.org