ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

 
  அச்செடு மின்னஞ்சல்
 
 

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு


ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

 

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

 

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் ‘முஸ்லிம் தீவிரவாதி’ அல்லது ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் ‘ஊடக தர்மம்’.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை ‘பயங்கர ஆயுதங்கள்’; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

 

நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை” இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘மாத்யமம்’ நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, “அது பத்திரிகை சுதந்திரம்” என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் – நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக ‘சத்தியமார்க்கம்‘ போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் – குறிப்பாக – பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

“உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது “நமக் கென்ன?” என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.

இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.

———

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

இந்த வீடியோவைப் பார்த்தால் கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கும்

புனித தேசம்

வீடியேவைக்காண இங்கே

கிளிக்கவும்

விடைபெறுகிறான் ஒரு கொடுங்கோலன்

போ! வராதே!

எட்டு ஆண்டுகள்! எத்தனை மனிதர்கள். இந்த மண்ணில் பிறந்து அதன் அழுக்கைக் கூட ரசித்து வாழப் பிறந்தவர்களை உன் ஆயுதங்களால் அழித்தாய். அதற்காக உன்னை ஆண்டவனே அனுப்பியதாகவும் அறிவித்தாய்!

உன் அத்தனைத் திமிரையும் ஒரு செருப்பு அடக்கியதே! அந்த நேரம் கூட செத்து விடுவோம் என்று நீ பதை பதைத்தாயே! ஆனால்… எத்தனை பச்சிளம் குழந்தைகள் உன் குண்டுகளுக்கு இரையாகி துடிதுடித்து இறந்தது. எத்தனை குழந்தைகள் தன் சொந்தங்களைப் பிரிந்து அனாதையாகிவிட்டது. விதவையாகிய பெண்கள் எத்தனை? துணையை இழந்த ஆண்கள் எத்தனை? தள்ளாத வயதில் வீல் செயரில் தள்ளிச் செல்லக்கூட ஒரு உறவினர் இல்லாத எத்தனையோ முதியவர்கள்?

 பிள்ளைக்குப் பெற்றோர் இல்லை! பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லை! ஒரு உறவுக்கு மறு உறவு இல்லை என நீ துண்டாடியது எத்தனை பேர்? சொந்தங்கள் எத்தனை சொத்துக்கள் எத்தனை என்று அத்தனையும் கணக்கிட்டுப் பார்த்ததில் ஒரு சிறிய பங்கு உன் செல்ல மகளுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாயா?

இத்தனை நாள் செய்ததினால் ஏற்பட்ட விரக்தியில் மனமுளைச்சலாகி பகலிலும் கனவிலும் உன்னை நீயே கொல்லத்தான் போகின்றாய். நேற்றுவரை உன்னை நேசித்தவர்கள் நாளை எப்படி பேசப்போகின்றார்கள் ஏசப்போகின்றார்கள் என்றும் பார்க்கத்தான் போகின்றாய்.

உலகம் முழுக்க உனக்கு கிடைத்ததை மரியாதை என்று மாற்று வார்த்தையாகவல்லவா பார்த்து வந்தாய். கொன்றால் கோடி முறை கொன்று விடுவார்கள் என்று பயந்ததனாலல்லவா இரும்புக் கோட்டையை கட்டி நடமாடினாய்.

ஊடகம் ஒரு ஆயுதம் என்று கேட்டிருக்கின்றோம். அது மெய்யா பொய்யா என்பதுவல்ல. ஆனால் அந்த ஊடகத்துறையிலிருந்த ஒருவன் தன் கால் செருப்பையே ஆயுதமாக்கி உன்னை அனுப்பியனானல்லவா, அதுவே பெரிய ஆயுதம். இதற்கு மேலுமா வேண்டும் உனக்கு மரியாதை?

வேட்டி மடித்து நடப்பவர்கள் தெருநாயைப் பார்க்கையில் மடிப்பை அவிழ்த்து விடுவார்கள். அது அது நாயை மரியாதை செய்வதற்காக அல்ல! கடித்து குதறிவிடும் என்ற பயத்தினால்தான். அதைப் போன்று உன் காட்டேறித் தனம் பாயாமல் இருப்பதற்காக தன்னை பாதுகாத்துக் கொண்ட நிகழ்வைத்தான் நீ மரியாதை என்று கருதினாய். எம்மைப் பொறுத்தமட்டில் இரண்டும் ஒன்றே!

உன் நாக்கில் உமிழ் நீர் இருந்ததோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு நொடியிலும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகள்தான் இருந்தது. உலகில் யாரும் பயங்கரவாதம் செய்யக் கூடாது என்று நீ ஓலமிட்டபோதெல்லாம் அதில் நிறைந்திருந்து மறைந்திருந்த வார்த்தைகள் இன்று புரிகின்றது. பயங்கரவாதியாக நான் ஒருவனிருக்க உலகில் வேறு பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது என்றுதானே நீ ஓலமிட்டாய்.

அதிலும் கூட பல பயங்கரவாதிகள் இருப்பதாக நீ காட்டியதும் பெரும் பொய்யல்லவா? உயிரியல் ஆயுதம் என்று கூறி நீ பறித்த உயிர்கள்தான் எத்தனை? ஆனால் பின்னர் ஒரு மயிர் அளவு கூட உன்னால் அதை காட்ட முடியாததும் நீ பொய்யர் சக்கரவர்த்தி என்ற மணி மகுடத்தை சூட்டி உன்னை நீ இழிவு படுத்தியதும் உயிருள்ள ஒரு மனிதனால் சுமக்க முடியாதல்லவா? அதனால்தான் வெட்கம் கெட்டவனாகிய நீ சுமந்து திரிந்தாயோ?

பால் குடிக்கும் பாலகர்கள் பரிதவிக்கும் மாதர்கள் துணையிழந்த கணவர்கள் துயரம் தின்னும் பெரியவர்கள் என்ற பெரும் பட்டியல்கள் உன்மீது கேட்டுவைத்த சாபங்கள் உன்னை சும்மா விடாது. இன்று சொல்லப்படுவதைப்போல் ஒரு செருப்பால் முடிந்துவிடாது.

போர் போர் போர் என்று நீ செய்ததெல்லாம் அமைதிக்காக என்று காரணம் கூறிய கொடுங்கோலனே. உன் அகராதியில் அமைதிக்குப் போர் என்பது கன்னித்துவத்திற்கு கற்பழிப்பு என்ற வாதத்திற்கும் எள்ளளவும் வித்தியசம் தெரியவில்லையே! அதனால்தான் அஃப்கானிலும் இராக்கிலும் இன்ன பிற அப்பாவி நாடுகளிலும் சென்று உன் ஆட்கொல்லி உருவங்கள் கொலை நடத்தியதுடன் கற்பழிப்புகளும் நடத்தியதா? என்ன கிடைத்தது உனக்கு? எண்ணை கிடைத்தது! அப்படித்தானே.

நீ அமைதியை நாடியிருந்தால் எத்தனையோ நாடுகள் உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி உறங்க ஒர் உறவிடமின்றி தவிக்கின்றதே அதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? ஒரு வேளை சோறு போடுவதால் உன் ஆயுதம் விற்றுத் தீர்ந்துவிடாது என்பது தெரியாமலிருக்க நீ மடையன் ஒன்றும் அல்ல! அப்படித்தானே?

அமைதியை விரும்பும் நீ முதலில் ஆயுதத்தை தவிர். ஆயுதம் ஏந்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கு! அதையே உலகமயக் கொள்கையாக்கு! இதைச் செய்தால் நீ அமைதியை விரும்புபவன் எனலாம்.

ஆனால் நீயோ அண்டை நாடுகளில் சிண்டு முடிந்துவிட்டு அங்கும் இங்குமாய் ஆயுதம் விற்று அப்பாவிகளின் இரத்தத்தையல்லவா உணவாகப் பருகுகின்றாய்.

உனக்கு அடிமையாக வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் அறிவாளிகள் எனப்படுவோர் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களும் உன் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி ஆயுதம் வாங்கிக் குவிப்பது உன் வெற்றி என்று கருதுகின்றாய். அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் என்ற பெயரில் இன்னும் சில மணித்துளிகள் கூட அதன் சுகம் அனுபவித்துச் செல்லும் உன்னால் ஏற்பட்ட சோகம் ஏராளம். நீ மட்டும் தான் இப்படி எனவில்லை. உன் நாட்டின் வெளியுறவுக் கொள்கை இது. அதில் நீ கூடுதல் கவனம் செலுத்தி கூடுதல் இரத்தம் குடித்தாய் அவ்வளவே!

இனிவரும் அதிபர் பாரபட்சமில்லாமல் பலருக்கும் பணியாற்றியதைக் கேட்டிருக்கின்றறோம். அவன் இரத்தத்தில் அது ஊறிக் கிடந்தால் இனியும் அது ஊற இருந்தால் ஒரு சில காலங்கள் உலகம் சற்று அமைதியாகும்.

உன்னைப் போன்றல்ல இறைவன். அவன் நாடியதைச் செய்வான். செய்ததன் காரணங்கள் மறுமையில் கிடைக்கும். அதில் எந்த பொய்யும் இருக்காது. அந்த நாளில் நீயும் உன் அப்பன் புஷ்ஷும் அள்ளி வீசிய குண்டுகள் உன்னைத் திருப்பித் தாக்கும். அந்த மறுமை நிச்சயம். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வழி இல்லாமல் இல்லை! ஆம்! உன் இதயம் தூய்மையுற்றால், உன் பாவங்களுக்கு பரிகாரமாய் இறைவனிடம் இன்றே நீ கேட்டுவிட்டால் கருணையுள்ள இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்

இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக்கொள். எதுவாக இருப்பினும் உன்னை மறுமையில் சந்திப்போம். போ!

நன்றி– அபூ நூறா

படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! -வெ.ஜீவகிரிதரன்

http://www.muslimleaguetn.com/news.asp?id=514

மன்சூரா அபு அம்ரா அமைதியாக தன் வீட்டினிலே உறங்கிக் கொண்டிருந்த 18-வயது இளம் பெண்- மருத்துவமனை கட்டிலில் உடலெங்கும் காயங்களுடன் கை, கால்கள் முறிந்த நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறாள். அவளுடைய 17-வயது சகோதரன் எஹியா உயிரற்ற பிணமாக கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டான்.

உம்மு மஹ்மூது தஸ்பி 47 வயதான தாய்-தன் குழந்தையுடன் இரவு முழுவதும் வெட்ட வெளியில், கொட்டும் மழையில் தவித்து நின்றாள். காலையில் தன் வீடு முழுவதும் சிதறிக் கிடந்த சன்னல் கண்ணாடித் துண்டுகளை பெருக்கித் தள்ளுகிறாள்.

உரூத்- பள்ளி மாணவி குப்பைக் குவியலாய் கிடக்கும் தன் வீட்டின் இடிபாடுகளில் தன் புத்தகப்பையைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.

டிசம்பர் மாதத்தின் பனிக்கால பண்டிகை கொண்டாட்டங்களில் உலகமே திளைத்திருக்கிறது. ஹகிறிஸ்துமஸ் தாத்தா|-வின் பரிசு மழை தேவலோகத் திலிருந்து பொழியாதா என உலக மக்கள் ஆர்வத்துடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், பாலஸ்தீனக் குழந்தைகள் எந்த நேரம் வானத்திலிருந்து போர் விமானங்கள் அள்ளி இறைக்கும் குண்டுகள் வந்து தம் வீட்டை சாம்பல் மேடாக்கு மோ என்ற அச்சத்துடன், இரவு முழுவதும் அந்த கறுப்பு வானத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க ஏவல் நாய் இஸ்ரேல் டிசம்பர் 28ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரை போர் விமானங்கள், ஏவுகனைகள் மூலம் தாக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1000 இலக்குகளை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன், மிகத் துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஜி.பி.எஸ். வசதி படைத்த விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இஸ்ரேலின் இந்த பயங்கரவாத தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், என்ற பாரபட்சமின்றி, இரவிலே வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் வீட்டைவிட்டு ஓடவேண்டும். இல்லையெனில் வீட்டோடு சமாதியாக்கப்படுவார்கள் என்ற நிலையில் காசா நகர மக்கள், எந்த நேரத்தில் ஏவுகனை தன் வீட்டின் மீது பாயுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். தங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் மாற்று இடமும் இல்லை என்பதால் வெளியேறவும் முடியாத நிலை.

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிஸார் ரய்யான் ஜபாலியா அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். புத்தாண்டு தினத்தன்று அவருடைய குடியிருப்பையும் திட்டமிட்டு தாக்கின. இஸ்ரேல் ஏவுகனைகள். இதில் ரய்யான் தன் மனைவி, குழந்தைகளோடு கொல்லப்பட்டார். காசா நகரின் பாராளுமன்ற கட்டிடம், இராணுவ நிலைகள், போலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. காசா நகருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வழிகள் முழுவதும் தகர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் கேடுகெட்ட இனப்படுகொலையை தட்டிக்கேட்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆண்மையில்லை. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹஹஅனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்|| என அறிவுரை கூறியுள்ளது. இந்த அறிக்கை-பாலஸ்தீன குழந்தைகள் பயிலும் கல்விக் கூடங்களின் மீது விழும் ஏவுகனைகளை தடுத்து நிறுத்துமா?

காசா நகரில் வருங்கால பாலஸ்தீன சந்ததிகளே இல்லாதொழிந்திடும் ஈனச் சதியில் இஸ்ரேல் இறங் கியுள்ளது. இளம் குழந்தைகள் பயிலும் நர்சரிகள், பள்ளி கள் மேல் குண்டுகள் வீசப்படுவது அங்கே மிகவும் சகஜம். இது குறித்து ஹஹமனித உரிமை|| முழக்கமிடும் அமெரிக்காவோ அதன் துதிபாடிகளான மேற்கத்திய நாடுகளோ ய+னிசெப் நிறுவனமோ இதுவரை வாய் திறந்ததில்லை. காசா நகர குழந்தைகள் உலகின் மற்ற குழந்தைகள் பெற்றுள்ள ஹஹவாழும் உரிமை|| இல்லாதவர்களாகவே உள்ளனர். காசா நகர குழந்தைகள் பிறக்கும்போதே ஹஹமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக|| பிறக்கின்றனர். என்றைக்கு மரண தண்டனையை இஸ்ரேல் நிறை வேற்றுமோ? என ஏவுகனைத் தாக்குதலை எதிர்பார்த்தே வாழ்கின்றனர், வளர்கின்றனர்.

இவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப் போல என்ஜினியர் ஆகவேண்டும், டாக்டர் ஆக வேண்டும், பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கிடையாது உயிரோடு வாழவேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை! ஈத் பெருநாளிலே தனக்கு அப்பா நல்ல சட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும்,, பரிசுப் பொருள் வாங்கித் தரவேண்டும் என பாலஸ்தீனக் குழந்தை ஆசைப்படுவதில்லை அந்த பெருநாளிலாவது நம் மேல் ஏவுகணைகள் பாயாமல் இருக்க வேண்டுமே என்றுதான் பிரார்த்திக்கின்றது.

இஸ்ரேலின் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக் கிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அங்கே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் முக்கிய அரசியல் வாதிகள் ஒன்று கூடி முடிவெடுத்தது தான் இப்போது நடந்து கொண்டிருக்கு காசா நகரத்தின் மீதான தாக்குதல் என சொல்லப்படுகிறது. கதிமா கட்சியின் தலைவியும், இஸ்ரேல் வெளிவிவகாரத் துறை அமைச்சருமான டிசிப்பி லிவினி மற்றும் லேபர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான எஹ{த் பராக் ஆகிய இருவரின் தேர்தல் சதித்திட்டம் தான் இந்த தாக்குதல். ஊழல் புகாரில் சிக்கியுள்ள இஸ் ரேல் பிரதமர் எஹ{த் ஒல்மர்ட் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மக்கள் மத்தியில் தன் செல் வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டி இத் தாக்குதலுக்கு அனுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இஸ்ரேலை ஆளும் அரசியல்வாதிகள் பாலஸ்தீனத்தை தாக்கி அழித்து தங்களின் தேச பக்தியை தம் நாட்டு மக்களிடம் நிரூபிப்பது வழக்கம். இம்முறை நடக்கும், தாக்குதலும் இந்த ஈனத்தனமான அரசியல் வாதிகளின் செய்கைதான் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

தன் ஏவல் நாய் இஸ்ரேல் நடத்தும் இந்த கொடூரமான, நியாயமற்ற, காட்டு மிராண்டி தாக்குதலை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகனைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா இத்தாக்குதல் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஈராக் மீதான போர், இஸ்ரேலுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் என பல்வேறு நடவடிக்கைகளால், அரபு நாடுகளில் ஜார்ஜ் புஷ் தன் செல்வாக்கை தொலைத்து விட்டார்.

புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பாரக் ஒபாமா இதிலிருந்து மாறுபட்டிருப்பார் என அரபு நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. ஹஹஇந்த நேரத்தில் ஒபாமாவின் மௌனம் அவர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அர்த்தமளிக்கும்|| என்கிறார் ஹகான்ப் பிளிக்ட்ஸ் போரம்| என்ற அமைப்பைச் சேர்ந்த பால் வுட்வேர்ட். இவருடைய இந்த அமைப்பு ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அமைப்பு களைப் பற்றிய மேற்கத்திய நாடுகளின் தவறான கணிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பாகும். கெய்ரோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முஸ்தபா அல் சயீத் கூறுகையில் ஹஹஒபாமாவைச் சுற்றி உள்ள நபர்கள் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால் எந்த நிலையிலும் அவர்கள் இஸ்ரேலின் கருத்துக்கு மாற்று சொல்ல துணிய மாட் டார்கள்|| எனக் கூறுகிறார். தற்போது பாரக் ஒபாமா தன் வெளி விவகார கொள்கையை தீர்மானிக்கும் குழுவில் ஹிலாரி கிளின்டனை அமைச்சராகவும், ராஹ்ம் இம்மானுவேலை முதன்மை செயலாளராகவும் தெரிவு செய்திருப்பதை சுட்டிக் காட்டியே இதைக் கூறுகிறார்.

வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும் வீரம் விளைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் தம் வேறுபாடுகளை புறம்தள்ளி ஒன்றுபட்டு எழுந்து நின்றால் உலகமே அவர்களின் பின்னால் நிற்கும். சர்வதேச பயங்கரவாதி அமெரிக்காவிற்கும் அதன் அடியாட்களுக்கும் முடிவு கட்டும் பயங்கரவாதம்-மனித குல நாகரிகத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்தை எதிர்த்து மனித நேய போராட்டத்தில் நாமும் கரம் இணைப்போம். பாலஸ்தீனம் காக்க குரல் கொடுப்போம். ஒரு நாடும், இனமும் அழியாமல் காப்போம். பாலஸ்தீன பாலகர்களின் உயிர் காப்போம்.

-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

நன்றி:
imantimes@googlegroups.com on behalf of Muduvai Hidayath

இஸ்ரேல் Vs ஹமாஸ்- நுழைகிறது ஹிஸ்புல்லா?!

காஸா: காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக மனிதாபிமானமில்லாத வகையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரோலுக்கு பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா தயாராக வருகிறது.

லெபனானில் இரு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடந்த மோதலில் இஸ்ரேலுக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஈரானின் ஆதரவோடு இஸ்ரேலை எதிர்கொண்டது ஹிஸ்புல்லா.

இந் நிலையில் இப்போது காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை தாக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் ஏ.கே.-47 துப்பாக்கிகளாலும் பழங்கால ராக்கெட்டுகளையும் கொண்டு தாக்க பதிலுக்கு போர் விமானங்களையும் டாங்கிகளையும் கொண்டு காஸா பகுதியில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். கடந்த 10 நாட்களில் 700 பாலத்தீனர்களைக் கொன்றுள்ளது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பள்ளிகள், மருத்துவமனைகளும் தப்பவில்லை. இங்கு தான் அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

செளதி தலைமையிலான அரபு நாடுகள் இஸ்ரேலை கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளை கெஞ்சிக் கொண்டுள்ளன.

இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை வழக்கம்போல் அரபு நாடுகள்- அமெரிக்கா, பிரான்ஸ் கூட்டணி ஆகியவை இடையே பிரிந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

இந் நிலையில் காஸாவில் அப்பாவிகள் மீதான இந்தத் தாக்குதலையடுத்து இஸ்ரேலுக்கு வட பகுதியிலிருந்து பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா அமைப்பினர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு ஈரானின் முழு ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலில் ஹிஸ்புல்லாவும் இறங்கினால் விவகாரம் இஸ்ரேல்-பாலஸ்தீனம்-லெபனான் என்ற அளவோடு நிற்காமல் துருக்கி, ஜோர்டன், எகிப்து, ஈரான் வரை பரவும் என்ற பரவலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சமரசத்துக்கு முயன்று வருகிறார். இரு தரப்பினரையும் இன்று கெய்ரோவுக்கு அழைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்ததையில் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாசும் பங்கேற்கிறார்.

காஸா பகுதியில் மின்சாரம், குடிநீர் சப்ளையை துண்டித்துவிட்டு இந்தத் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது இஸ்ரேல். எகிப்து எல்லையில் உள்ள ஒரே செக்போஸ்ட் வழியாகத் தான் உணவும், மருந்துகளும் காஸாவுக்குள் வந்து கொண்டுள்ளன.

வெளிநாட்டு டிவி குழுவையும் காஸாவுக்குள் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. தனது ராணுவப் படைகளுடன் சேர்ந்து தான் போக வேண்டும் என்ற நிபந்தனையோடு சில டிவி குழுவினரை மட்டும் அனுமதித்துள்ளது.

இந் நிலையில் இந்த மோதல் குறித்து விவாதிக்க ஈரான் நாடாளுமன்றத் தலைவர் அலி லரிஜானி சிரியா சென்றுள்ளார். அந் நாட்டு அதிபர் அல் அஸாத்துடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருவதைக் கண்டித்து இஸ்ரேல் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் வெனுசுவேலா அதிபர் ஹூகோ சாவேஸ். கம்யூனிஸ தலைவரான இவர் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவேஸ் கூறுகையில், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இனியாவது இஸ்ரேல் அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்றார்.

‘சங்கீதா’வா இருந்த நான் ‘ஆயிஷா’ ஆனேன்.

”ஓட்டம்… ஓட்டம்… ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!” – அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து ‘பர்தா பயங்கரவாதப் பெண்’ என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.

”பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் ‘அந்த பர்தா பொண்ணு!’ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!” – வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது.

ராஜபாளையம் பக்கத்து மம்சாபுரம்தான் என் சொந்த ஊரு. டிப்ளமோ படிக்கும்போது இஸ்லாம் மதம் மீது திடீர்னு ஈர்ப்பு. இஸ்லாம் பற்றின விஷயங்களை ஆர்வமா தேடித் தேடிப் படிச்சேன். ‘சங்கீதா’வா இருந்த நான் ‘ஆயிஷா’ ஆனேன். வீட்ல பயங்கர வசவுகள், சண்டை. அந்தச் சமயம் த.மு.மு.க. விருதுநகர் மாவட்டச் செயலாளரா அறிமுகமான இப்ராஹிம் எனக்கான ஆறுதலை தன்னிடம் வெச்சிருந்தார். காதல், திருமணம்னு அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் எதிர்பார்த்த எதிர்ப்பு. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு அவரோட சென்னைக்கு வந்துட்டேன். ‘எப்படியும் பொழச்சுக்கலாம்’னு நம்பிக்கை. அவரோட உறவினர் ரஃபீக் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் ‘அல்உம்மா’ அமைப்பில் இருக்கார்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ரஃபீக்கால் எங்களுக்கு வேலை எதுவும் ஏற்பாடு செய்ய முடியலை. அவரோட நண்பர் உசேன் மூலமா முயற்சி செய்தோம். கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்துத் தங்கவைக்க முடிஞ்சதே தவிர, அவராலும் எங்களுக்கு வேலை வாங்கித் தர முடியலை. இதுக்கிடையில் குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு ரஃபீக் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரியாது. அப்பதான் 1998-ல் கோவை குண்டுவெடிப்பு.

கோவை உக்கடம் தொடங்கி டெல்லி வரைக்கும் பரபரப்பாகிருச்சு. திடீர்னு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆட்கள் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. ரஃபீக்கையும் காணோம், வேலையும் கிடைக்கலைங்கிற ஒருவித நிர்க்கதியான சூழல். திரும்பத் திரும்ப உசேனை நச்சரிக்கவும், அரும்பாக்கத்தில் வேற வீட்டில் தங்கவெச்சார். அதுவரை கோவை குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகளில் படிச்சுத் தெரிஞ்சுக்கிற பார்வையாளராத்தான் இருந்தோம். ஆனா, அந்தச் சம்பவத்தில் நாங்களும் பங்கேற்பாளர் ஆகிற மாதிரி சூழல் கூடிய சீக்கிரமே உருவாச்சு. நாங்க செஞ்ச ஒரே தப்பு, அரும்பாக்கத்துக்கு வீடு மாறும்போது கோடம்பாக்கத்து வீட்டிலேயே என் டைரியை விட்டுட்டு வந்ததுதான். அந்த டைரியில் நாங்க காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது, ரஃபீக் அடைக்கலம் கொடுத்ததுன்னு எல்லா விவரங்களும் இருந்தது. என் போட்டோவும் அதில் இருந்தது. போலீஸ் கைக்கு அந்த டைரி கிடைக்கவும் வாழ்க்கையே போச்சு.

மேலும் தொடர்ந்து……….

 

சிறுபான்மையினரின் புதிய மாத இதழ்

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்
 
க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மானைக் கொண்டு விரைவில் சம‌ உரிமை மாத‌ இத‌ழ் பிப்ர‌வ‌ரி மாத‌ம் முத‌ல் வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ் செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.
 
ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழில் சிறுபான்மையின‌ருக்கு அர‌சு வ‌ழ‌ங்கும் ச‌லுகைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள், சிறுபான்மையின‌ரின் செய்திக‌ள், ச‌மூக‌, க‌ல்வி ம‌ற்றும் பொருளாதார‌ மேம்பாட்டு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ செய்திக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெறும்.
 
ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழை அனுப்ப‌ த‌மிழ‌க‌மெங்குமுள்ள‌ ஜ‌மாஅத்துக‌ள், முக்கிய‌ப் பிர‌முக‌ர்க‌ள் ம‌ற்றும் பொதுந‌ல‌ அமைப்புக‌ள் குறித்த‌ முக‌வ‌ரி ம‌ற்றும் தொலைபேசி எண்க‌ளை கீழ்க்க‌ண்ட‌ முக‌வ‌ரிக்கு அனுப்பி வைக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 28460127 / 9840040067
மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி :
ithayathulla@gmail.com

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

கடலூர், ஜன. 3: அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, புதுப்பிக்க முடியாமல் போனவர்கள் புதுப்பித்துக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வெளிநாட்டு நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழகத்தினரை பணி அமர்த்தி வருகிறது.

பதிவு மூப்பு அடிப்படையில், அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே பதிவு செய்தவர்களில் பலர் தவிர்க்க முடியாத காரணத்தால் புதுப்பிக்கத் தவறியிருப்பார்கள்.

அவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க 1-1-2009 முதல் 31-3-2009 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பிக்கத் தவறியவர்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றிதழ்களின் 2 நகல்கள், புதுப்பித்தல் கட்டணம் ரூ.112-க்கான ஓவர்ஸீஸ் மேன்பவர் கார்பரேஷன் லிமிடெட் என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை ஆகியவற்றுடன் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 24464286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 நன்றி: தினமணி

 http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20090103215629&Title=Districts+News&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=1/4/2009&dName=LP%DB%F4o&Dist=

பலஸ்தீனம் பற்றி எரிகிகிறது –

மீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவுக்குள் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் தடை செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் நீண்ட இஸ்ரேலிய பிரிவினைச் சுவரும் மறுபக்கம் எகிப்திய செக்போஸ்ட் அடைப்பும் இருக்க, மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து, குண்டுகளைப் பொழிந்ததற்குச் சமமாக சுமார் 16க்கும் மேற்பட்ட எஃப்16 ரக யுத்த விமானங்களின் மூலம் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து “கஸ்ஸா ஆட்சியாளர்களை அழிப்பதாக”க் கூறி வெறியாட்டம் ஆடியிருக்கிறது. எல்லா மருத்துவமனைகளும் இறந்துபோன உடல்களாலும் படுகாயமுற்று உயிருக்குப் போராடும் ஃபலஸ்தீன் மக்களால் நிறைந்து விட்டன. [இஸ்ரேலின் அத்துமீறல்கள் பற்றி அறிய சத்தியமார்க்கம்.காம் தேடல் பகுதியைக் காண்க]

 

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவினுள் செல்வது இஸ்ரேலால் தடுக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்திலிருந்து வந்த மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு ட்ரக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அழித்தது. காயமுற்றவர்களின் காயங்களுக்கு இடுவதற்குப் போதிய மருந்தின்றி மருத்துவமனைகளில் காயங்களுடன் ஃபலஸ்தீனியர்கள் அலறித் துடித்தவாறு உள்ளனர்.

மத்தியக் கிழக்கில் 40களின் இறுதியில் ஆரம்பித்த இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற இத்தகைய அட்டூழியங்கள், தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்கவும் போராடவும் செய்கின்ற இக்காலகட்டத்திலும் ஃபலஸ்தீனியர்களின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத்தில் எவ்விதத் தொய்வும் இல்லாமல் தொடர்கின்றது.

அப்பாவி ஃபலஸ்தீன் மக்களின் மீது இஸ்ரேலின் நாசகாரப் படைகள் குண்டுமழை பொழிந்து நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனரைக் கொன்றொழிக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு, ஒன்றுக்கும் உதவா அறிக்கைகளை வெளியிடும் உலக நாடுகளும் அரபுச் சோற்றுப் பண்டாரங்களும் இம்முறையும் வெற்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மெக்டொனால்டின் ருசியையும் இஸ்ரேலின் கோலாவையும் ருசித்துப் பருகி, கூடிக் குலாவிப் பிரியும் அரபுலீக், இன்று புதன்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளது. வழக்கம் போன்று ஒரு வெற்று அறிக்கையினை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.

இஸ்ரேல் செய்யும் அனைத்து மனிதவிரோத பயங்கரவாதங்களுக்கும் சுக்கான் பிடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செருப்பைத் தொடக்கூட தைரியம் அற்ற ‘ஐக்கிய நாடுகள் சபை’ என்ற பெயரைத் தாங்கியுள்ள அமெரிக்க நாடுகள் சபையின் செயலர் பேங்கிமூன் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக அடக்கமாகத் திருவாய் மலர்ந்துள்ளார்.

தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களில் ஒன்றைக்கூட மதிக்காமல், தொடர்ந்து அராஜகத்தில் தெனாவெட்டாக ஈடுபட்டு வரும் உலகின் ஒரே நாடு இஸ்ரேலாகும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏதாவது ஓர் ஏழைநாடோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சிம்மசொப்பனமாகத் திகழும் தென் அமெரிக்காவின் ஏதாவது ஒரு நாடோ இதுபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மதிக்காமல் இருந்திருந்திருந்தால், அதற்கு ஆயிரம் பொருளாதாரத் தடைகளும் அமெரிக்கப் பெரியண்ணனின் வல்லூறுப் படைகளின் படையெடுப்புகளும் நிகழ்ந்திருக்கும்.

மேலும்……..

வந்தேறி இஸ்ரேலின் வான்வழி தாக்குதல். வாய்மூடி மெளனம்காக்கும் முஸ்லிம்உலகம்.


அன்பர்களே,
‘ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக’ இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவதாக சங்கைப்படுத்தப்பட்ட பூமியான பாலஸ்தீன மண்ணுக்கு வந்தேறிகளாக வந்து சேர்ந்தவர்கள் யூதர்கள். தனது எஜமான் ‘ஆக்கிரமிப்பு புகழ்’ அமேரிக்காவின் ஆதரவோடு ‘இஸ்ரேல்’ என தன்னை பிரகடனப்படுத்திய நாள்முதல் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்து தாகம் தீர்த்து வருகிறது.

இந்த வந்தேறிகளின் ரத்தவெறிக்கு பச்சிளம் பாலகர்கள் கூட தப்பியதில்லை. இந்த வந்தேறிகள் எப்போது தாக்குதல் நடந்தினாலும் தம்மால் இயன்றவரை போராடி ஷகீதாகி வருபவர்கள் பாலஸ்தீனியர்கள். வந்தேறிகளின் பீரங்கி வாகனத்தை தனது கையிலுள்ள கல்கொண்டு தாக்கி நாங்கள் உயிர்நீத்தாலும் உனக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என நெஞ்சுரம் கொண்ட தங்கங்கள் பாலஸ்தீனியர்கள்.

அப்படிப்பட்ட முஸ்லிம்கள் மீது வந்தேறி போர்விமானங்கள், நேற்று எவ்வித முன்னறிவிப்பு அன்றி சரமாரியாக குண்டுமழை பொழிந்ததில் 215 பேர் ஷகீதாகியுள்ளனர்.75oபேர் படுகாயமடைந்துள்ளனர். அக்கிரமத்தாக்குதல் நடத்திய வந்தேறி இஸ்ரேல், தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. வழக்கம் போல முஸ்லீம் நாடுகள் பத்திரிக்கையில் வன்மையாக கண்டிக்கிறோம் என்ற அறிக்கையோடு வாய் மூடிவிட்டது.

அன்று நபி[ஸல்]காலத்தில் ஒரு உடைவாளை கரமேந்தி பெரும்படையை வென்ற வீரமிக்க பரம்பரை, இன்று பறந்து விரிந்த ஆட்சி அதிகாரம்,தளவாடங்கள், செல்வ செழிப்புகள் எல்லாம் இருந்தும், ஒரு சுண்டக்காய் ,நம் இனத்தை கருவருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், இவர்களை பற்றியும் நபி[ஸல்]அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

‘ஒருகாலம் வரும் அப்போது தட்டிலுள்ள இறைச்சியை நோக்கி வருபவர்களை போல் உங்களை நோக்கி எதிரிகள் வருவார்கள்அவர்களுடைய உள்ளத்தில் உங்களை பற்றிய பயம்அகற்றப்பட்டுவிடும்என்று நபி[ஸல்]அவர்கள் கூறியவுடன், அந்த நாளில் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா? என நாங்கள் வினவ, இல்லை! நீங்கள் அதிகமாக இருப்பீர்கள் ஆனால் உங்கள் உள்ளத்தில் ‘வகண்’ நிறைந்திருக்கும் என்றார்கள். ‘வகன்’ என்றால் என்ன என்று நாங்கள் வினவ, உலகத்தை விரும்புவீர்கள் மரணத்தை வெறுப்பீர்கள் என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். [நூல்;அஹ்மத்]

என்னே! ஒரு சத்திய வார்த்தை இன்றைய ஆட்சியாளர்களுக்கு அப்படியே பொருந்திப்போகிறது பாருங்கள். ஆனாலும் இந்த யூத வந்தேறிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம் நிச்சயமாக! யூதர்களே உங்களை முஸ்லிம்கள் வெல்வோம்[இன்ஷா அல்லாஹ்] இதை இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்களை நம்பி நாங்கள் சொல்லவில்லை. எங்களின் ஒரே தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

‘நீங்கள் யூதர்களை வெல்வீர்கள்! எந்த அளவுக்கென்றால் கல்லுக்குப்பின்னால் மறைந்திருக்கும் யூதனை அந்தக்கல்,இதோ! ஒரு யூதன் என்று காட்டிக்கொடுக்கும்.என்று நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள். நூல்;புஹாரி.

அந்த நாளுக்காக உலக முஸ்லிம்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!

நன்றி: நிழல்களும் நிஜங்களும்