மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த [...]

துபாயில் இரத்த தான முகாம்

துபாய்: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் அங்கமான ஜமாஅத்துத் தவ்ஹித் துபாயில் உள்ள அல்-வாஸ்ல் மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ரத்த தான முகாமில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும்,பல்வேறு மொழி பேசுவோரும் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி காலை 8 மணி முதல் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இரத்த தானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட செல்பேசி எண்களை [...]

மேற்குவங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு :காம்ரேடுகளின் திடீர் பாசத்தின் பின்னணி !

மார்க்சிஸ்ட் கொடியுடன் முஸ்லிம் முதியவர் ? – அபு ஸாலிஹ் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு வழங்கப்படும் என்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரி வித்திருக்கிறார். இது சமய அடிப்படையிலான இட ஒதுக்கீடு அல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களான முஸ்லிம்களின் உரிமைகளை பேணுவதில் பெருமிதம் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் [...]

யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்… சோமாலிய கடற்கொள்ளையர்கள்…கடந்த சில வருடங்களாகவே மீடியாவில் அடிக்கடி தென்படக்கூடிய இரண்டு வார்த்தைகள்… “நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)” ஆம். இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் ஒரு மாபெரும் சோகக்கதையே இருக்கிறது. ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்? இந்த பதிவில் இவர்கள் இன்றைய நிலைக்கு வந்த காரணங்களை காணவிருக்கிறோம்…இன்ஷா அல்லாஹ்… சோமாலியா 98.5% முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு. வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது, மொத்த [...]

ஹமாஸ் தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளில் ஏழுபேர் வசிப்பது இஸ்ரேலில்

துபை:நேற்று முன் தினம் துபை போலீஸ் ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொலையாளிகளைப் பற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு புதிய திசை நோக்கிச் செல்கிறது. வீடியோ காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட 11 பேரில் பிரான்சைச் சார்ந்தவர் தவிர மற்ற அனைவரும் போலி பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் உண்மையான நாடு எது என்பது குறித்து குழப்பம் தொடர்கிறது. குற்றவாளிகளின் பெயர் கொண்ட ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசித்துவருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இவர்கள் இக்குற்றத்தை [...]

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “”ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது. ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் [...]

ஒரு(பொன்.சுதா) மண்ணாங்கட்டியின் சிந்தனை.

“மறைபொருள்” என்ற பெயரில் பொன்.சுதா தயாரித்திருந்த குறும்படத்தை நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார். அதனைப் பற்றிய பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அழகான கவிதை போன்று இப் படத்தைக் கொடுத்துள்ள பொன்.சுதா – விற்கு முதலில் வாழ்த்துக்கள்! டெக்னிலாக ஓரிரு குறைகள் கண்ணில் பட்டாலும் கருப் பொருளுக்குத் தொடர்புடைய, மனதில் தோன்றிய சில கருத்துக்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன். உடை உடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகத்தினரும், நாட்டவரும் மாறுபட்ட அளவுகோல்களை நிர்ணயித்துள்ளனர் என்பதை நன்கு அறிவோம். நடக்கும் [...]

இஸ்ரேல்லுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை.

டெஹ்ரான்: முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் எங்களிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதநிஜாத் அறிவித்துள்ளார். உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார். ஈரான் இப்போது ஒரு அணு ஆயுத நாடாகும். 20 சதவீத எரிபொருளில், முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாம் தயாரித்து விட்டோம். [...]

இனவெறியும், மொழிவெறியும்

ஏக இறைவனின் திருப்பெயரால்…. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. பம்பாய் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்ற அறிவிப்பு ராகுல் காந்தியிடமிருந்து வந்ததும் ராகுல் காந்தியை மிரட்டியதுடன் அவரது அன்னையாரை இத்தாலி தாய் என்று வழமைபோல் வசைப் பாடி தனது சீடர்களுக்கு அவர்கள் மீதான இனவெறியை ஊட்டி அவருக்கு கருப்புக் கொடி காட்ட தூண்டினார் இனவெறியர் பால்தாக்கரே. தாக்கரேயின் தாதர் கோட்டையில். ராகுல் காந்தி அவர்கள் இவருடைய மிரட்டலை சவாலாக எடுத்துக் கொண்டு பாதுகாப்பின்றியே பம்பாய்க்கு சென்று அதுவும் சிவசேனை [...]

நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய கார்ட்டூன் படம்

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒள்று நபிகள் நாயகம் (ஸல்) குறித்து கார்ட்டூன் படம்  ஒன்றை திரையிட தீர்மானித்து அதற்காக வாக்கெடுப்பு நடத்துகிறது. நமது உயிரினும் மேலான இறைத்தூதர் (ஸல்) குறித்து ஏற்கனவே கேலிச்சித்திரம் வெளியிட்ட டென்மார்க் அரசுக்கெதிராக நமது எதிர்ப்புக் கணைகளை பதிவு செய்தது போல் கீழ்க்கானும் சுட்டியை கிளிக் செய்து நபிகள் நாயகம் (ஸல்)பற்றிய  கார்ட்டூன் படத்தை தடை செய்ய வேண்டுமா? என்னும் கேள்விக்கு “ஆம்” என்று உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். இத்தகவலை உங்கள் நண்பர்கள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.