நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் இன்றைய மக்கள் சமூகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலான நோயாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் (Hypergly clemia) தோன்றும் நோயே இது. இன்றைய நிலையில் இந்திய மக்கள் 50 வயதிற்கு மேல் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமாக உண்ணுதல், வறுத்த உணவுகள் (Fried Foods) கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், இனிப்பு வகைகள் அதிகம் உண்ணுதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, விளையாட்டு-களை புறக்கணித்தல், சோம்பல் வாழ்க்கை, எப்பொழுதும் எதையாவது கொறித்துக் கொண்டு, தொலைக்காட்சியை பார்த்த வண்ணம் பொழுதை கழித்தல், அதிகமாக தூங்குதல் ஆகியவை இந்நோயை இரு கரம் கூப்பி வரவேற்கும் நிலைப்பாடாகும். பாரம்-பரிய நோயாகவும் இந்நோய் பலருக்கு வரும் வாய்ப்பும் உண்டு. பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டாலும், நிறைய பேருக்கு இந்நோய் இருப்பதே தெரியாமலேயே வாழ்கின்றனர். உடல் மெலிதல், அதிகம் உண்ணும் விருப்பம், இளவயதிலேயே பற்கள் ஆடி உதிர்தல் போன்றவை ஏற்பட்டால், நீரிழிவு நோய்க்கு சோதித்துக் கொள்வது அவசியம். ஒரு சிலர் எனக்கு லேசாக சர்க்கரை உள்ளது. நான் எந்த மருத்துவமும் செய்து கொள்வதில்லை. உணவு கட்டுப்பாட்டிலேயே சரி செய்து கொள்கிறேன் என்பர். வேறு சிலரோ நான; யோகா செய்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பர். வேறு சிலரோ நான் தியானம் செய்து இந்நோயை கட்டுப்-படுத்துகிறேன் என்பர். இன்னும் சிலரோ நான் கடும் உடற்பயிச்சி செய்து இந்நோயி-லிருந்து தப்பிக்கிறேன் என்பர். இதெல்லாம் சரியா? நோய் கட்டுப்பாட்டிற்கு இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளலாமா என இனி நோக்குவோம். நீரிழிவு நோய் ஒரு கடுமையான நோயாகும். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கும் உயிராபத்தையும் ஏற்படுத்தும் நோய் இது. உடலின் வளர் மாற்றங்களை பாதிப்பதால், மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, நீர், ஊட்டச் சத்துகள் வளர் மாற்றங்கள் (Carbohydrates, Protein, Fat, Water, Electolytes Metabolism) முழுமையாக பாதிக்கப்படுகின்றன.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பொதுவானவை | குறிச்சொற்கள்: சர்க்கரை நோய், நீரிழிவு நோய்

