ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் தம் உடையில், பேச்சில், உணவில், உறவில், உள்ளத்தில், எண்ணத்தில், இஸ்லாமைக் கொண்டிருக்க வேண்டும். தம் குடும்பத்தை இஸ்லாமிய வார்ப்பில் வார்த்திட வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது. குடும்பச்சூழல் முதலில் மனிதர்களைச் சார்ந்ததே. அவர்களது நடத்தைகள்தாம் இஸ்லாமை வீட்டினுள் அழைத்து வரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மற்றவர் நலத்தைக் கருத்தில் கொண்டவராகவும் துஆச் செய்பவராகவும் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவராகவும் அன்பைப் பரிமாறிக் கொள்பவராகவும் இருக்க வேண்டும். “மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், அவனை வணங்குபவர்கள், புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையைவிட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் ஆகிய முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (அல்குர்ஆன் 9:112).
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | குறிச்சொற்கள்: இல்லம், இஸ்லாம், குடும்பம், குழந்தைவளர்ப்பு, சூழல், பெற்றோர்

