“கணவனைப் பிடிக்காததால் புதுப்பெண் தற்கொலை” என்ற செய்திகளும் “கணவனின் கொடுமையினால் இரு குழந்தையின் தாய் தீக்குளிப்பு” போன்ற செய்திகளும் விருப்பமில்லாத கணவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் அனுமதிக்காததால் ஏற்படுகின்ற விளைவுகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை தான் விரும்பாத ஒருவருக்கு மனைவியாக வாழ்வைத் தொடர முடியாது என்ற நிலையில், ஒரு முஸ்லிம் பெண் எப்போது வேண்டுமானாலும் தன் கணவரிடமிருந்து பிரிந்து விடலாம். அவளுடைய முடிவில் – ஆட்சியாளர் உட்பட – எவரும் தலையிட முடியாது என்பது இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பெண்ணுரிமையாகும்:
மேலும்….
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம் | குறிச்சொற்கள்: இஸ்லாம், திருமணம், விவாகரத்து

